திருமுருகாற்றுப்படை விளக்கம்
திருமுருகாற்றுப்படை விளக்கம்
Standard Delivery ₹60 | Free Shipping on orders above ₹1,000 across South India!
Author : கி.வா.ஜகந்நாதன்
Publisher : அருணா பப்ளிகேஷன்ஸ்
Couldn't load pickup availability
நக்கீரர் இயற்றியது திருமுருகாற்றுப்படை. சங்க நுல்களுக்கும் சைவ நூல்களுக்கும் இணைப்புப் பாலம் போல விளங்கும் இந்த நூல் என்றும் மங்கலமாய் ஒளிர்கிறது. காரணம் சைவத்திருமுறைகளில் இந்நூல் கோக்கக்பெற்றிருந்தமையே. மிகப் பழங்காலம் தொட்டே இது பாராயண நூலாக இருந்தது மற்றொரு காரணம். சங்க நூல் ஆதலின் இந்நூலின் நடை எளிதில் யாவருக்கும் புலனாவது இல்லை. ஆனாலும் பக்தர்கள் இதைப் பாராயணம் செய்து வருகின்றனர். இதன் பொருளைத் தெரிந்துகொண்டு பாராயணம் செய்தால் இதனிடம் உள்ள ஈடுபாடு மிகுதியாகும். எனவே இதைப் படித்த பிறகு திருமுருகாற்றுப்படையின் மூலத்தைப் படித்தால் பொருள் ஓரளவு தெரியும். நக்கீரர் சிவபெருமானுடைய சாபத்தைப் பெற்ற பிறகு அதனை நீக்கிக் கொள்ளும் பொருட்டு கைலாச யாத்திரை சென்றார் என்றும் இடையில் ஒரு மலைக் குகையில் அடைபட்ட போது முருகப்பெருமான் மீது திருமுருகாற்றுப்படை பாடி விடுதலை பெற்று பின்பு காளத்தி மலை சென்று கைலாச தரிசனம் செய்து சாபத்தினின்றும் விடுதலை பெற்று மதுரையை அடைந்தார் என்பது பொதுவான செய்தி. அதேபோல பக்தர்களும் தமது கவலைகளில் இருந்து விடுபட திருமுருகாற்றுப்படை பாராயணம் உதவும். பொருளைத் தெரிந்துகொண்டு பாராயணம் செய்வீர்.
| Brand: Centaram Shopping |
|
Tags:
thirumurukaarruppadai vilakkam
|
Customer Reviews
Share your experience with this product
✉️ Your review will be sent to us and published after verification. We reply within 24 hours.
Share
