{"product_id":"தொல்காப்பியப்-பூங்கா","title":"தொல்காப்பியப் பூங்கா","description":"\u003cp\u003e\u003cspan\u003eநமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியமே முதல் நூலாகும். அது ஒருவகைத் தொகை நூலுமாகும். தொல்காப்பியத்துக்கு முன் தமிழில் பல்வகை இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதும் அவற்றையும் தம் கருத்துகளுக்குத் துணையாகத் தொல்காப்பியர் பயன்படுத்திக் கொண்டுள்ளாரென்பதும் அவர்தம் நூலில் பற்பல இடங்களிலும் என்ப, என்மனார், என்றிசினோர் என்பன போலக் கூறியுள்ளமையால் புலப்படும் உண்மையாகும். தமிழரின் மொழி, பண்பாடு, வாழ்வு போன்ற அனைத்தையும் ஓரளவேனும் அறிந்துகொள்ள உதவும் சில்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சரியான ஆதாரம் அது என்பதையும் நாம் புறக்கணித்து விடக்கூடாது. அதற்குத் துணை செய்யும் வகையில் தொல்காப்பியக் கருத்துகள் நாட்டில் பரவ வேண்டும் என்னும் நன்னோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா எனும் நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Centaram Shopping","offers":[{"title":"Default Title","offer_id":47942024233196,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/thokkappiyapoonga.jpg?v=1784008669","url":"https:\/\/centaram.com\/products\/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}