{"title":"டிஸ்கவரி புக் பேலஸ்","description":"","products":[{"product_id":"சி-மோகன்-படைப்புகள்","title":"சி.மோகன் படைப்புகள்","description":"\u003cp\u003eகலையையேதனிப்பெரும் அறமாகவும், அது வெளிப்படும் ஊடகமாகக்கலைஞனையும் பார்த்த விமர்சகர்களில் சி.மோகன் குறிப்பிடத்தகுந்தவர். வாழ்க்கையின் அடிப்படைகளை, மெய்மையை, மொழிவழி விசாரிக்கும் இலக்கியத்தோடு பிற கலை வடிவங்களானநவீன ஓவியம், சினிமா போன்றவற்றையும் சேர்த்துக் காண்பதற்கும் ரசிப்பதற்கும் ஒரு தலைமுறை தமிழ்வாசகர்களைத் தூண்டிய எழுத்துகள் இவருடையவை. நாவல் என்பது நீளமான கதை என்ற எண்ணமேசிறு வட்டமாக இருந்த நவீன வாசகர்களிடமும் நிலைபெற்றிருந்தசூழலில், தத்துவத்தோடு புனைவு மேற்கொண்டிருந்த துண்டிப்பைச் சரிசெய்யும் ஊடகம் நாவல் என்ற வாதத்தின் மூலமாக, நாவல் என்னும் தனிப்பெரும் வடிவத்தைப் பற்றிய விவாதத்தைத் தொடங்கி வைத்தவர். சினிமா போல, சிம்பனி இசைவடிவம்போல தனிக் கலைவடிவம் நாவல் என்கிறார். இலக்கிய விமர்சகர், கலை விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர், சிறந்த புத்தக வடிவமைப்பாளர், செம்மையாக்குநர், சிறுகதையாளர், கவிஞர், நாவலாசிரியர் எனப் பல முகங்களையும்கொண்டவர். கலையின் அடிப்படைப் பண்பான எதிர்ப்பு மனோபாவத்துடன் தனித்தும் பசித்தும் விழித்தும் தொடர்ந்து செயல்பட்டுவரும் தமிழ்ச் சிறுபத்திரிகை இயக்கத்தின் மதிப்பீட்டுத் தொடர்ச்சி சி.மோகன். எந்தக்கலை நம்பிக்கையின் காரணமாகத் தமிழின் நவீன இலக்கிய ஆசான்களில்ஒருவராக உருவாகியிருக்கிறாரோ, அந்த நம்பிக்கையின் தீர்க்கதரிசனமாகவும்அவரது இருப்பு அமைந்திருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47675840790764,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpeg.jpg?v=1779862655"},{"product_id":"குற்றப்-பரம்பரை","title":"குற்றப் பரம்பரை","description":"\u003cp\u003eபேரன்பும்பெரும்கோபமும் கொண்டவன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபிறந்ததுராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி கிராமம். பெற்றோர் வேலுச்சாமித் தேவர் – லக்ஷ்மி அம்மாள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகல்லூரிப்படிப்போடு ராணுவத்துக்குப் போனவர். துப்பாக்கி தூக்கிச் சுடும் போதும் வனங்களின் பூ நோகாமல் குறிவைத்தவர். பிறந்த மண்ணில் சிந்திச் சிதறிக் கிடக்கும் மனுசப்பாடுகளை இலக்கியம் ஆக்கியவர். மண் சார்ந்த, வல்லமைமிக்க, தனித்த ஓர் எழுத்து பாணியைதனதாக்கிய வேல ராமமூர்த்தி, பல்லாயிரம்பேரையும் இமைக்க மறந்து கேட்க வைக்கும் ‘மேடைக் கதைசொல்லி: பல்கலைகழகப் பாடங்களாகவும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுக் களஞ்சியமாகவும் ஆன இவரது கதைகள், அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஃபிரெஞ்ச், மலாய், கொரியன் மற்றும் சீன மொழிகளிலும் ஆக்கம்செய்யப்பட்டுள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eபல ஆண்டுகள் இந்திய அஞ்சல் துறைக்குள் அடைபட்டிருந்த இந்த ராணுவக் குதிரை, கட்டுடைத்து வெளியேறி, மதயானையாக. கொம்பனாக.. பாயும் புலியாக... சேதுபதியாக... தமிழ் திரைப்படத் துறையில் வலம் வரத் தொடங்கிஉள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eவேடியப்பன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47675918156012,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9158ea67962becfaff5c41ce2cf8711d.jpg?v=1779863039"},{"product_id":"பட்டத்து-யானை","title":"பட்டத்து யானை","description":"\u003cp\u003e\u003cspan\u003eபிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான். ‘வீரர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்’ என்ற கூற்றுக்கு ஏற்ப மயிலப்பனின் ரத்தம் சிந்திய பூமியில் இருந்து முளைத்தெழுகிறான் பெருநாழி ரணசிங்கம் என்றொரு மற்றொரு மாவீரன். ரணசிங்கம் தனக்கென ஓர் இளைஞர் படையை உருவாக்குகிறான். அவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறான். வெள்ளையர்களை அழிக்க அவர்களுடன் ஆக்ரோஷமாக மோதி, அவர்களின் ஆயுதங்களையே சூறையாடுகிறான். ஒருநாள், பிரிட்டிஷ் படை அதிகாரிகளுடன் ரணசிங்கம் நேரடியாக மோதும் சூழ்நிலை வருகிறது. இருவருக்கும் இடையிலான போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை வீரம் செரிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேல ராமமூர்த்தி. ஜூனியர் விகடனில் இந்தக் கதை தொடராக வெளிவந்தபோதே பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது, அந்த வரலாற்றுப் பொக்கிஷம் உங்களுக்காக ஒரே நூலாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47675951612140,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/43cfc5847efbbe3ed242b08395dcdfee.jpg?v=1779863213"},{"product_id":"காத்திருங்கள்-காதலிப்போம்","title":"காத்திருங்கள் காதலிப்போம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த காதலுக்கு இருக்கும் சக்திதான் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டபிறகு அதைப்பற்றி பேசமாலும் எழுதாமலும் எப்படித்தான் இருப்பது! இந்தப் புத்தகத்தை படித்தபிறகு உங்களுக்கும் காதலைப் பற்றி நினைக்காமலும் பேசாமலும் இருக்க முடியாதென்பதே இதன் வெற்றி... ஒரு புது மெய்நிகர் காதல் அனுபவத்திற்கு தயாராகுங்கள்...ஜாலி வசந்த்Channel Head - Adithya TV - Sun Networkதிருமணம் ஆனவர்கள் வாழ்க்கைத் துணையை புரிந்துகொள்ளவும், ஆகாதவர்கள் திருமணத்தை புரிந்துகொள்ளவும் என பக்கத்துக்கு பக்கம் பக்கத்திலேயே உட்கார்ந்து நம் வாழ்வைப் பார்த்து எழுதியதுபோல் ஒரு பக்குவம்... கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய ஒரு வாழ்வியல் தொகுப்பு...விக்னேஷ்காந்த் Blacksheep நிறுவனர்அன்புத் தம்பி RKவின் தமிழ் காதலே இந்த புத்தகம். தொலைக்காட்சி முழுவதும் நகைச்சுவை, நடுவே தனியாய் தெரியும் இவர் தமிழ்ச்சுவை... உழ மறந்தால் நாமில்லை, உன் உள்ளம் உழுது நிறைய எழுது, வாழ்த்துக்கள் தம்பி!ஈரோடு மகேஷ் விஜய் டி.வி.இந்தப் புத்தகம் பல ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது, நமக்குத் தெரியாத திருக்குறளை அறிமுகப்படுத்துகிறது. சினிமா பாடல்களும் சங்க இலக்கியமும் சந்திக்கும் இடத்தை சுட்டிக் காட்டுகிறது. யாரிடம் எல்லாம் காதல் இருக்கிறதோ, அவர்களிடம் இந்தப் புத்தகமும் கண்டிப்பாய் இருக்க வேண்டும்...மதுரை முத்து விஜய் டி.வி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47675987067116,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ad49155785e33f7de7a4058a533b48ca.jpg?v=1779864039"},{"product_id":"அங்கோர்-வாட்","title":"அங்கோர் வாட்","description":"\u003cp\u003eஅங்கோர்வாட்டின் செங்குத்தான் படிக்கட்டு கற்பனைக்கு எட்டாததாக இருக்கிறது. நிழற்படத்தில் காண 'என்னைப் பெத்தஅம்மா...' என்று மனம் முனகியது. பொன்மகாலிங்கத்தின் 'அங்கோர் வாட் நூலை வாசித்தபின்எப்படியும் ஒருமுறை ஆயுளுக்குள் அங்கே போய்வர வேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது. வாய்க்குமோ வாய்க்காதோ? ஆனால், இந்தப் புத்தகம் வாசித்த நிழற்படங்கள் கண்ட நினைவு தங்கியிருக்கும்நெஞ்சில்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நூலைஎழுதிய ஆசிரியருக்குப்\u003c\/p\u003e\n\u003cp\u003eபாராட்டுகள்!\u003c\/p\u003e\n\u003cp\u003eநாஞ்சில்நாடன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676007678188,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4a6839d9f6362963bbae3eab18c6e636.jpg?v=1779864271"},{"product_id":"ஜெ-பிரான்ஸிஸ்-கிருபா-கவிதைகள்","title":"ஜெ .பிரான்ஸிஸ் கிருபா கவிதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா . அவரது நிதானமான வரிகளாய்க் கவிதை வெளிப்படும் இடங்களில் காணப்படும் வெளிச்சமானது யோசிக்கத் தூண்டுவதாகும் . மனக்கொந்தளிப்பின் வேர் ஆழமான ஒரு கவிபோதம்தான் என்றே படுகிறது . ‘சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்துக்குத் திரும்பும் வழி இது.’\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதேவதேவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676011053292,"sku":null,"price":404.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpeg_c196da15-13d2-42be-abb2-f637da664255.jpg?v=1779864618"},{"product_id":"சிறையில்-ஒளிரும்-நட்சத்திரங்கள்-பாகம்-2","title":"சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் - பாகம் 2","description":"\u003cp\u003eஎழுத்தாளர் மதுரை நம்பி எழுதிய 'சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்' முதல் பாகம் தமிழ் வாசகப்பரப்பில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அலை தணிவதற்குள் அந்நூலின் இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறார் மதுரை நம்பி. முதல் நூலைப்போலவே இந்நூலும், வாசக மனதில் நெகிழ்ச்சியையும், மனிதாபிமான உணர்வையும், நியாயத்துக்காக நிற்க வேண்டும் என்கிற உந்துதலையும் நிச்சயமாகத் தூண்டுகிறது. சிறுகதைகள் மற்றும் நாவல்களுக்கான கச்சாப்பொருள் நிரம்பிய சுரங்கமாக இந்நூல் அமைந்துள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003e-ச.தமிழ்ச்செல்வன்\u003c\/p\u003e\n\u003cp\u003eசிறைவாசிகள், அவர்கள் செய்த அல்லது செய்யாத குற்றங்கள். அக்குற்றங்களை அவர்கள் செய்வதற்கான காரணங்கள், சந்தர்ப்பச் சூழ்நிலைகள், சிறைவாசக் காலத்தில் மனநிலைகள், அவர்களின் நடத்தைகள், சர்வசாதாரணமாகக் அவர்களைச் கண்காணிக்கும் காவலர்கள், உயர் அதிகாரிகள், உறவினர்களின் எதிர்வினைகள் என எல்லா அம்சங்களையும் ஊன்றிக் கவனித்து, தன் தேர்ந்த எழுத்தோவியங்களில் அவை அனைத்தையும் பதிவுசெய்து இருக்கிறார் மதுரை நம்பி. சிறை என்ற ஒடுக்குமுறை நிறுவமைப்பினை, ஆதி முதல் அந்தம் வரையிலான நடைமுறைகளை, விதிகளை, அதன் நுணுக்கமான இயக்கங்களை எளிய ஆற்றொழுக்கான நடையில் அற்புத ஓவியங்களாகத் தீட்டிக் காட்டியிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- கமலாலயன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676023341292,"sku":null,"price":235.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2_ac9cbe1a-8db7-46b8-b8ff-2ed859b42c06.jpg?v=1779864924"},{"product_id":"நாளைக்கு-வரும்-கிளிகள்","title":"நாளைக்கு வரும் கிளிகள்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"216\" data-end=\"242\"\u003eநாளைக்கு வரும் கிளிகள்\u003c\/strong\u003e என்பது எழுத்தாளர் \u003cstrong data-start=\"261\" data-end=\"274\"\u003eபிரபஞ்சன்\u003c\/strong\u003e அவர்களின் ஆழமான மனிதநேயப் பார்வையையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தும் சிறுகதைத் தொகுப்பாகும். மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் நிகழும் சின்னச் சின்ன சம்பவங்கள், உறவுகளின் அருமை, நம்பிக்கை, அன்பு மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை உணர்வுபூர்வமாகச் சித்தரிக்கும் படைப்பாக இந்நூல் திகழ்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676025176300,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/e73c44bdbb37928d8ab4af2838a91413.jpg?v=1779865302"},{"product_id":"தமிழ்தேசியம்-ஏன்-எதற்கு-எப்படி","title":"தமிழ்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?","description":"\u003cp\u003eதமிழ்ச்சமூகத்தின் உயிராக இருந்த பெரும்பான்மை மக்களே மொழி, கலாச்சாரத்தைக் காத்து வந்தவர்கள். ஏனெனில் தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டித் தமிழ் மக்களை ஆதிக்கம் செய்து வந்த நிலப்பிரபுத்துவ அரசர்களும் அவர்களது பரிவாரங்களும்தான் வட இந்திய நிலப்பிரபுத்துவக் கும்பலுடனும் மத குருக்களுடனும் இணைந்துகொண்டு சமஸ்கிருத மொழியை, மதக் கலாச்சாரத்தையும் பயன்படுத்தி வந்தன.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதங்களுடைய மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கத் தமிழ் பேசும் மக்கள் போராடி வந்துள்ளனர். தமிழ் நிலப்பிரபுத்துவ அரசுகள் சிதைந்து நிலைகுலைந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா முழுமையும் அடிமைப்படுத்தியதுபோல தமிழகத்தையும் அடிமைப்படுத்தினார்கள். தமிழ் மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினாலும் தமிழ் நிலப்பிரபுகளும், தரகு வியாபாரிகளும் தரகு முதலாளிகளும் ஆங்கிலேயர்களோடு கூடிக் குலாவிக்கொண்டுதான் இருந்தனர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ் மக்களைச் சுரண்டுவதற்காக அவர்களோடு கூட்டுச் சேர்ந்து நின்றனர். சர், திவான் பகதூர் போன்ற பட்டங்களைப் பெற்றுக்கொண்டு ஆங்கில மொழிக் கலாச்சாரத்தில் திளைத்தனர். இவர்கள் தலைமையில்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சி என வழங்கிக்கொண்டு பிரிட்டிஷாரிடம் சலுகைகள் தேசவிடுதலைப் போராட்டத்திற்கு எதிராக நின்றனர். கோரி.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ்த்தேசியப் பெருந்தலைவர் தமிழரசன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676026880236,"sku":null,"price":521.7,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/aefdd8740f81bb428930e7522a473c63.jpg?v=1779865572"},{"product_id":"என்-ஸ்ரீராம்-தேர்ந்தெடுத்த-சிறுகதைகள்","title":"என்.ஸ்ரீராம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகிராமத்து வெளிசார்ந்த வாழ்க்கையைப் பதிவாக்கியுள்ள என். ஸ்ரீராமின் கதைகள், இனவரைவியல் தன்மையுடன் மண்ணுக்கு நெருக்கமானவை. இவரின் கதைகள், எளிய மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏன், இப்படி எல்லாவற்றையும் சிதைக்கின்றன என்ற கேள்வியை வாசிப்பின் வழியாக எழுப்புகின்றன. மதிப்பீடுகள் சிதலமாகியுள்ள கிராமத்துச் சூழலில், மனித இருப்புக் குறித்துக் கதைக்கிற ஸ்ரீராம், பெரும்பாலான புனைகதைகளில் முக்கியமான திருப்பங்களைப் பற்றி விளக்கிடாமல் மௌனம் சாதிக்கிறார். எழுத்துபோலவே மௌனமும் வலிமையானது என்றநிலையில் வாசகன் பிரதிக்குள் தொடர்ந்து பயணிக்கவேண்டியுள்ளது. மரபான கதைசொல்லலில் இருந்து விலகிநின்று சித்திரிக்கிற இத்தகைய சம்பவங்கள்தான் இவரின் தனித்துவம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676029567212,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpg_916ab7d9-f149-4b2c-b3c0-f02d4f440334.jpg?v=1779865907"},{"product_id":"சிறுகோட்டுப்-பெரும்பழம்","title":"சிறுகோட்டுப் பெரும்பழம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்க் கவிதை மரபின் நீண்ட நெடிய தொடர்ச்சியின் கடைசிக் கண்ணியாகத் தன்னைப் பாவிக்கும் புதுக்கவிஞனான விக்ரமாதித்யன், வாழ்க்கைப் பார்வை, உள்ளடக்கம் சார்ந்து நவீனத்துக்கும் மரபுக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் இருக்கிறார். யாத்திரையில் இருக்கும்போது வீட்டைப் பற்றிய ஞாபகம்; வீட்டிலிருக்கும்போது யாத்திரை பற்றிய ஞாபகம்; மனம் செல்லும் இடத்தில் உடல் இல்லை; உடல் செல்லும் இடத்தில் மனம் இல்லாமல் போகும் திரிசங்கு நிலைதான் விக்ரமாதித்யனின் வாழ்வும் கவிதையும். மனமும் உடலும் அபூர்வமாக ஒத்திசைந்திருக்கும்போதான கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். நாடோடி, சித்தர், யாத்ரிகர் என விக்ரமாதித்யனுக்குப் பல படிமங்கள். வாழ்க்கை அவரை நாற்திசைகளிலும் தூக்கியெறிந்து சிதறடித்திருக்கிறது. ஆனால் தனது இதயத்துக்கு அருகில் அவர் காலம்காலமாகப் பராமரித்துவரும் சுயத்தை, தனது செருப்பைப் போலவோ உடைகளைப் போலவோ தொலைக்கவே முடியாதவர் விக்ரமாதித்யன். அந்தச் சுயம்தான் விக்ரமாதித்யன் என்ற கவிஆளுமையின் சொர்க்கமும் நரகமும். - ஷங்கர்ராமசுப்ரமணியன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676046213356,"sku":null,"price":357.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/d61ce81f94035cb9f644063f247a821f.jpg?v=1779866176"},{"product_id":"குமரி","title":"குமரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிந்து சமவெளி நாகரிகம் குறித்த காலகட்டத்து வாழ்வைப் பற்றியே படைப்புகள் வராத சூழலில், அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த கடலால் விழுங்கப்பட்ட நாகரிகமான குமரிக்கண்டத்து பண்டையத் தமிழர் வாழ்வியலை, தாய்வழிச் சமூக நெறிகள் மற்றும் தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றின் மீதான புனைவாக இந்த நாவல் வியப்பூட்டுகிறது.  நம்மிடம் இப்போது இல்லாதுபோன அலங்கு என்கிற நாய் இனம், பலவிதமான யாளிகளான மகர (ஆடு) யாளி, சிம்ம யாளி, யானை யாளி பற்றிய இந்த நாவலில் வரும் விவரணைகள், அழிந்துபோன டைனோசர்கள், சங்க இலக்கியத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடும் விலங்கு, நற்றினையில் பேசப்பட்ட விலங்கு, கிரேக்க புராணங்களில் வரும் பீனிக்ஸ் பறவை, சீன ஜப்பானியர்கள் உருவகப்படுத்துகிற டிராகன் ஆகியவைபோல, தமிழ் இலக்கியங்கள் பேசுகிற யாளிகள் கற்பனை மிருகமா அல்லது அப்படி ஒரு விலங்கு வாழ்ந்து அழிந்துவிட்டதா?   வரலாற்றின் மீதான புனைவுகள் மிக அவசியமான ஒன்று. ராமாயணம், மகாபாரதம் மற்றும் சேர சோழ பாண்டியர்கள் மீதான புனைவுகளுக்கே பழக்கப்பட்ட நமக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பழந்தமிழர்கள் வரலாற்றுக் குறிப்புகளின் மீதான புனைவு என்ற வகையில் ‘குமரி’ மிகவும் அவசியமான ஒன்று.   -கரன் கார்க்கி\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676057387244,"sku":null,"price":394.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/1b2b6162a10b1c97e32777ff71da5ca7.jpg?v=1779866444"},{"product_id":"அம்பறாத்தூணி","title":"அம்பறாத்தூணி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒவ்வொரு கதையும் வெவ்வேறு பயணம்.  மின்சாரம் - மின்னல் - மயிலிறகு - மாற்றம் - முறுவல் - மௌனம் - முத்தம் - மிதப்பு என எதுவும் தரலாம் ஒரு கதை.   என்றபோதும், தருவதல்ல அதன் நோக்கம்.  மலர்வது மட்டும்தான்.  அதன் மணம ஒரு நுழைவாயில்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676165619948,"sku":null,"price":150.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/dba8fafa878a82c4f7d4dfb7d380f587.png?v=1779869457"},{"product_id":"தே","title":"தே","description":"\u003cp\u003e  கிராமத்து வாழ்க்கை என்பது நகர வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.  பொதுத்தன்மையிலிருந்து விரகி தனித்துவமான அடையாளத்தைக் கொண்டது. பல்வேறு வித்தியாசமான கலாசார பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டது.  அணிந்திருக்கும் ஆபரணங்கள், உடைகள், உணவுகள், பண்டிகை, கொண்டாட்டங்கள்,  பேச்சக்கள் என்று இடத்திற்கு இடம் வெவ்வேறானவை.  அவைகளே அவர்களின் பரம்பரை வாழ்வியல் முறைகள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e     ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், சிறு தெய்வ வழிபாட்டு முறைகள், விவசாயம், கண்மாய்கள், மீன்பிடி முறைகள், கேலிகள், கிண்டல்களினூடே ... மழையை மட்டுமே நம்பி வாழும் வெச்சரித்த கந்தக பூமியான கரிசல் பிரதேச மக்களின்  அச்சு அசலான கிராமிய வாழ்வைச் சித்தரிப்பதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர் சி.முருகன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e      தான் ஒரு பொறுப்புமிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதை வெளிக்காட்டாமல் தலைப்பா, தார்ப்பாச்சல், மண்வெட்டி கூடையுடன் நாவல் முழுவதும் நம்முடன் நிற்கிறார். அதுவே தே நாவலை ஒரு வீரியமிக்க படைப்பாக நம்முன்  நிறுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676179480812,"sku":null,"price":488.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/29bf42f517becdf637dc3a9ddb011591.png?v=1779869772"},{"product_id":"ஒரு-மனுஷி","title":"ஒரு மனுஷி","description":"\u003cp\u003eபெண்ணின் வாழ்க்கை, அவளது உணர்வுகள், ஆசைகள், போராட்டங்கள் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளை ஆழமாகப் பதிவு செய்யும் படைப்பு. ஆணாதிக்கச் சூழலில் தனக்கான அடையாளத்தையும் சுதந்திரத்தையும் தேடும் ஒரு பெண்ணின் மனநிலையைப் பிரபஞ்சன் தனது இயல்பான மொழிநடையில் சித்தரிக்கிறார். பெண்களின் வாழ்வியல் சிக்கல்களையும் மனித உறவுகளின் நுட்பங்களையும் உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கும் நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676185739500,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fd042a26cbafbb2266a01fe3e762aa84.jpg?v=1779870119"},{"product_id":"சனிக்கிழமை-ஜீவிகள்","title":"சனிக்கிழமை ஜீவிகள்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"208\" data-end=\"230\"\u003eசனிக்கிழமை ஜீவிகள்\u003c\/strong\u003e என்பது எழுத்தாளர் \u003cstrong data-start=\"249\" data-end=\"262\"\u003eபிரபஞ்சன்\u003c\/strong\u003e அவர்களின் மனிதநேயம் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பாகும். அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சாதாரண மனிதர்களின் உணர்வுகள், உறவுகள், சமூக முரண்பாடுகள் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை யதார்த்தமான பார்வையுடன் சித்தரிக்கும் படைப்பாக இந்நூல் அமைந்துள்ளது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676189311212,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4a6787bd8f24835a12d55b33d004706a.jpg?v=1779870296"},{"product_id":"சயனைட்","title":"சயனைட்","description":"\u003cp\u003eமுள்ளிவாய்க்கால்இனப்படுகொலைக்கு முன்னதாக வன்னிப்பெருநிலப்பரப்பில் நிறுவப்பட்டிருந்த நிழலரசு. அந்த நிழலரசின் கீழ்மக்கள் பாதுகாப்போடும் விடுதலையுணர்வோடும் வாழமுடிந்ததொரு பொற்காலம், போராளிகளது தன்னலங் கருதாத அர்ப்பணிப்பு, அவர்தம் ஒப்பிடற்கரிய வீரம் இன்ன பிறவற்றைப் பற்றி, வளவன் என்ற முதல்நிலைப் போராளியைமுன்வைத்து தீபச்செல்வனின் 'சயனைட்' நாவல் பேசுகிறது. தமது இனிய இளமைப்பருவத்தைமண்ணின், மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த அவர்கள். சுயகௌரவத்துடன் வாழத் தகந்த சூழலும் வாய்ப்புகளும் இல்லாமற் போனதேன்? என்ற கேள்வியுடன் சமூகத்தால்மட்டுமன்றி. குடும்பத்தாலும் கைவிடப்படும் ஒரு போராளியின் மனநிலையைநுணுக்கமாகச் சித்தரிக்கிறது நாவல். ஈழப் போருக்குப் பிறகானசூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகளுள் மிக முக்கியமானதொரு வரவு 'சயனைட்'\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ்நதி\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676205433068,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3253cb0b451435168d0947a5758044a8.jpg?v=1779871144"},{"product_id":"கி-ராஜநாராயணன்-தேர்ந்தெடுத்த-சிறுகதைகள்","title":"கி. ராஜநாராயணன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒருகாலத்தில் சிறுகதை தனது வடிவத்துக்காக அல்லாடிக்கொண்டிருந்தது. பிரெஞ்சா, ருஷ்யாவா, அமெரிக்காவா, இங்கிலாந்தா,... என்று பரிதவித்தது. வந்தது வந்தது...... முத்து முத்தா வந்து விழுந்தது.... தமிழ், மலையாளா, மராட்டியம், வங்கம், இந்தி என்று சேகரித்து சேகரித்து மடியில் கட்டி முடியலை! சினையாகி சினையாகி பலரக குட்டிகள் ஈன்ரன! ஒரு கட்டத்தில் போதும் என்று தோன்றவே ரகங்கள் பலவிதமாகி வடிவங்கள் உடைந்து விதவிதமாகிவிட்டன. மேலும் மேலும் உடைந்து குழந்தைகள் வரைந்த படங்கள் ஆகிவிட்டன, இனி... சிறுகதை வடிவங்கள், தோன்றிய இடங்களான வாய்மொழிக் கதைகள் போலவே ஆகலாம்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676257239276,"sku":null,"price":282.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/c35e492334c924aece9651f464184171.jpg?v=1779871856"},{"product_id":"விழுமுன்-எழுமின்","title":"விழுமுன் எழுமின்","description":"\u003cp\u003eஒரு தலைப்புக்குள் ஒரு கவிஞரை அறிமுகம் செய்கிறார். அவர்களின் கவிதையைக் குறிப்பிட்டு விளக்குகிறார். அப்படியே முந்தைய தலைமுறை படைப்பாளர் ஒருவரைத் தொட்டுக் காட்டுகிறார். வாய்ப்புக் கிடைக்கும் இடத்தில் மகாபாரதப் புராண இதிகாசக் கதைகளைச் சொல்லி அதன் பாத்திரங்கள் மூலம் வாழ்வியலை உணர்த்துகிறார். அதோடும் நிற்காமல் சங்க இலக்கியத்தையும், சமகாலத்தையும் இணைத்துக் காட்டுகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரு கட்டுரையில் இப்படிச் சொல்கிறார் ‘அன்னை தெரசாவிடம் கொடுப்பதற்குப் பணம் பொருள் என்று ஏதுமில்லை, ஆனால் அவருக்கு நேரமிருந்தது. கைவிடப்பட்ட பலரின் கடைசி நிமிடங்களில், ஆதரவுக் கரம் நீட்டி ஆறுதல் சொல்கிறார். தங்களை அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் போல உணரச்செய்ய அவர் கொடுத்ததெல்லாம் நேரம் மட்டுமே’ என்கிறார்.  அதுபோலதான், இவ்வளவு அறிவுச் செல்வங்களைத் திரட்டிக் கொடுத்து, நம்மை நம்பிக்கை அடையச் செய்ய தன் விலைமதிப்பற்ற நேரத்தைத்தான் நூலாகத் தந்திருக்கிறார் இராமகிருஷ்ணன் .\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676269134060,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/b7f6ca3b159d9f47bce3c10dfa8e5b5e.jpg?v=1779872086"},{"product_id":"100-சிறந்த-சிறார்-கதைகள்","title":"100 சிறந்த சிறார் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்த நூலில், மகாகவி பாரதி தொடங்கி, மாணவி சிந்துஜா (8-ஆம் வகுப்பு) அண்மையில் எழுதிய கதைகள் வரை தொகுக்கப்பட்டுள்ளன. சிறார்களுக்கு எழுதுவதும் பதிப்பிக்கப்படுவதும் இப்போது கவனம் பெற்று வருகிறது. இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும் 7 முதல் 12 வயதுச் சிறார்களுக்குரியவை. குழந்தைகளைப் பற்றிய படைப்புகள், குழந்தைகளே எழுதிய படைப்புகள், குழந்தைகளுக்கான படைப்புகள் என சிறார் இலக்கியம் மூன்று வகைப்பாட்டில் அமைகின்றது. இந்தத் தொகுப்பிலுள்ள 100 கதைகளில் 60 கதைகள் சிறார்களுக்கானவை. 40 கதைகள் சிறார்களைப் பற்றியவை. எல்லாக் கதைகளுமே சிறுவர்கள் வாசித்து மகிழக் கூடியவை. கதைப்போக்கில் மானுடப் பண்புகளை நிலை நிறுத்துபவை. தமிழ் சிறார் இலக்கியத்தின் தரத்தை எடுத்துக் காட்டுபவை. சிறுவர்கள் வாசிப்பதற்கான கதைக் களஞ்சியமாகவும் ஆய்வுக்கான ஆவணமாகவும் இந்தத் தொகுப்பு விளங்கும் என்று சொன்னால் மிகையல்ல.  \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676292530412,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/100.jpg?v=1779872383"},{"product_id":"வெக்கை","title":"வெக்கை","description":"\u003cp\u003eதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியருகே ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர் தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் இவருக்கும் இடமுண்டு மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியொலிப்பதைக் கேட்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். இவரது நூல்கள் ஆங்கிலம். இந்தி வங்காளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது கோவி ல்பட்டியில் வசித்து வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்காக தீப்பெட்டித் தொழிலில் குழந்தை உழைப்பை மையமாகக் கொண்டு 'கருவேலம் பூக்கள்' என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். அது தமிழக அரசு விருது பெற்றது\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676309864684,"sku":null,"price":188.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/aa20b7082bcec6468756d1058598bb5a.jpg?v=1779872918"},{"product_id":"கிராமத்து-தெருக்களின்-வழியே","title":"கிராமத்து தெருக்களின் வழியே..","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு ஊரின் ஜம்பதாண்டு காலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேசபாண்டியன், தனக்கு ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலந்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இந்நூலின் சிறப்பு. - எஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676361900268,"sku":null,"price":423.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpg_5648d845-59e8-4252-a538-12e31a7b4a85.jpg?v=1779873600"},{"product_id":"அத்திமரச்-சாலை","title":"அத்திமரச் சாலை","description":"\u003cp\u003eமனிதர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் உறவுகள், நினைவுகள், பிரிவுகள் மற்றும் மன உணர்வுகளை இயல்பான மொழிநடையில் பதிவு செய்யும் படைப்பு. எளிய மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களின் வழியாக அன்பு, தனிமை, ஏக்கம் மற்றும் நம்பிக்கை போன்ற உணர்வுகளை ஆழமாகப் பேசுகிறது. வாசகரின் மனதில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும் உணர்வுபூர்வமான நூல்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676410757356,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3c540d99d3671b1d41ac8e9bf18bb29a.jpg?v=1779874508"},{"product_id":"கெண்டைமீன்-குளம்","title":"கெண்டைமீன் குளம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெளித்திண்ணையில் படுத்திருந்த இவன் திடுக்கிற்றுக் கண் விழித்தான். பாதி வாசலுக்கு மேல் நிலா வெளிச்சத்தைத் திண்ணையின் எறப்பு நிழல் மறைத்திருந்தது. நேரத்தைச் சரியாக அனுமானிக்க முடிய வில்லை. சிறிதுநேரம் புறவெளியின் சப்தங்களை உற்றுக்கேட்டான். எங்கும் சேவல் கூவக்காணோம். நூறு ரூபாய் போட்டு ஒரு கடிகாரம் வாங்கமுடியாத தன் பிழைப்பின் மீது கோபம் எழுந்தது. முழங்காலுக்குக் கீழே அவிழ்ந்து கிடந்த வாயில்வேஷ்டியைச் சுருட்டிப் பிடித்துக்கொண்டே எழுந்து நின்றான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676411445484,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/520f8d64a0b0343dc3e59f26c7657b2c.jpg?v=1779874659"},{"product_id":"பயங்கரவாதி","title":"பயங்கரவாதி","description":"\u003cp\u003e\u003cspan\u003eமௌனிகளாய் இருப்போருக்காக மாத்திரமின்றி எங்கள் கதைகளை திரிப்போருக்கு எதிராயும் என் புனைவின் குரலைத் தருகிற இப் பயணம் துப்பாக்கியின் குழல்மீதுதான் நிகழ்கிறது எதிரில் துப்பாக்கி ஏந்திய இராணுவம் கண்காணிக்கும் தருணங்களில்தான் கிளிநொச்சி நகரப் பூங்காவிலிருந்து ‘பயங்கரவாதி’ கதையின் முதல் பக்கங்களை எழுதத் துவங்கினேன். அதே நகரத்தில் அமர்ந்தபடியே இறுதிப் பக்கங்கள்வரை தினமும் எழுதி முடித்தேன். வாழ்வையும் எழுத்தையும் போராட்டமாக்க வேண்டும் என்பதை காலம் கற்றுத் தந்திருக்கிறது. கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் தேடப்படும் காலத்தில் எழுத்தை ஒரு சுவாசமாக மாத்திரமின்றி ஆயுதமாகவும் பற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் கைகளில் தரப்பட்டிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676415377644,"sku":null,"price":338.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ba44f8b024ae1a292cbfce8ec06ed957.jpg?v=1779874822"},{"product_id":"அ-னா-ஆ-வன்னா","title":"அ னா ஆ வன்னா","description":"\u003cp\u003eபின்பொருநாள் பார்த்துக்கொண்டிருக்கையில் சட்டென்று வளர்ந்து சாப்பாட்டு இலைகள் நோக்கி உடைந்து எண்ணெய் வழியும் அப்பளங்கள் கூடைகளில் பயணிக்கும் ஏதோ ஒரு கல்யாணமண்டபத்தில் தாலி கட்டிக்கொண்டு கண்கலங்கிவிடைபெறுகிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநண்பர்களின்தங்கைகள் இல்லாத நண்பர்களின் வீடு, முற்றத்தில் பறிக்காமல் உதிர்ந்து கிடக்கும் பவழமல்லியுடனும்; பயணிகள் இறங்கிவிட்ட ரயில் பெட்டியின் வெறுமையுடனும்: நூற்றாண்டுகள் கடந்த மலைக்குகையின் மௌனத்துடனும்: நம் முன் நிற்கிறது\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676604809452,"sku":null,"price":122.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a3d770d82b46e53dbe27698fa9418c71.jpg?v=1779877487"},{"product_id":"கொக்கோடு-பறக்கும்-மீன்","title":"கொக்கோடு பறக்கும் மீன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை ; எல்லாவற்றையும்விட அதன் எளிமை இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம். - கவிக்கோ அப்துல் ரகுமான்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676702032108,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/16be8378f41fbe2caefbd531d1d94728.jpg?v=1779877823"},{"product_id":"வாடியது-கொக்கு","title":"வாடியது கொக்கு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை; எல்லாவற்றையும்விட அதன் எளிமை இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம். - கவிக்கோ அப்துல் ரகுமான்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676787589356,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/fbbb9da2a7dfa5b9dc613a6395d512a8.jpg?v=1779878156"},{"product_id":"சூரியனைச்-சுமந்து-செல்லும்-பாட்டி","title":"சூரியனைச் சுமந்து செல்லும் பாட்டி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை;\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676843884780,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/6d09d6516d85cc97761e6798597be346.jpg?v=1779878419"},{"product_id":"காக்காம்பொன்","title":"காக்காம்பொன்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகதைக்கு, கதை அம்சம் பலகீனமாய் சுட்டுவார்கள். ஆனால் தேர்ந்த கதாசிரியனின் திறமை, கதையைக் கதையல்லாமலும், கதையல்லாததைக் கதையாகவும் கலைத்தரத்திற்கு குந்தகம் வராமலும் செய்வதில் வெளிப்படும். இங்கே கதைப்பின்னல் இருக்கிறது. ஆனால் அது அசல்வாழ்வின் அசுவாரஸ்யத்திலிருந்து ஆசிரியர் கண்டுகொண்டவை. அவற்றை சுவாரஸ்யமாகச் சொல்வதில்தான் இவருடைய செய்நேர்த்தி தனித்துவப்பட்டிருக்கிறது. மதம் மாறினாலும், செய்யும் தொழிலால் மாறிவந்த சமூகத்தினரிடம் இருக்கும் இளக்கார உணர்வையெல்லாம் நளினமாக நயம்பட முதலில் சொன்ன பெருமை புத்தம் வீடு, செல்லப்பா போன்ற நாவல்களைப் படைத்த ஹெப்சிபா ஜேசுதாசனை சாரும். பிறகு ஐசக் அருமைராஜன் போன்ற எழுத்தாளர்கள் இவர்களின் வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களையும், பரிணாமங்களையும் கையாண்டிருந்தாலும், இப்போது அது குமாரசெல்வாவிடம் வந்து சேரும்போது ஒரு புதுவேகத்துடன் தீவிரமும், அழுத்தமும் பெற்றிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47676998222060,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/39aed1afc0cc840258f608ded4b32bb4.jpg?v=1779878802"},{"product_id":"குருதி-ஆட்டம்","title":"குருதி ஆட்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘தமிழ் இந்து திசை’ நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படைப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47677462970604,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/56158c7c7775cf990a16fcd4e0a9a263.jpg?v=1779880916"},{"product_id":"குண-சித்தர்கள்","title":"குண சித்தர்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதன் வாழ்வில் குறுக்கிட்ட மனிதர்களையும், அனுபவங்-களையும் அதன் வீர்யம் துளிக்கூடக் குறையாமல் க.சீ. சிவகுமார் சொல்லிவிடுகிறார். எல்லா பாத்திரங்களோடும் அவரும் கூடவே வலம் வருகிறார். அல்லது எட்ட நின்று பார்வையாளராக அவர்களைப் படம் பிடித்து நமக்குக் காட்டுகிறார். இவை கட்டுரைகளா, சிறுகதைகளா? புனைவா, உண்மையில் நடந்த நிகழ்வுகளா? வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இந்தக் கேள்விகள் எழுவதை மறுக்க முடியாது. குங்குமத்தில் தொடராக வந்தபோது வாசகர்களின் பேராதரவைப் பெற்ற ‘குண சித்தர்கள்’ இப்போது நூல் வடிவில்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684729012460,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ea931c58f1293492b038bd82057ad8eb.jpg?v=1780027360"},{"product_id":"கண்-பேசும்-வார்த்தைகள்","title":"கண் பேசும் வார்த்தைகள்","description":"\u003cp\u003eகாதல், மனித உறவுகள், நினைவுகள் மற்றும் வாழ்க்கையின் இனிமையான தருணங்களை மனதை வருடும் கட்டுரைகளாகப் பதிவு செய்திருக்கும் நூல் இது. ஒரு கவிஞனின் பார்வையில் காதலின் பல பரிமாணங்களையும், மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளையும் எளிமையான மொழியிலும் ஆழமான சிந்தனையுடனும் நா. முத்துக்குமார் பகிர்ந்து கொள்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684730454252,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/88458768392b90694a1735bea8d6ebca.jpg?v=1780027705"},{"product_id":"பால-காண்டம்","title":"பால காண்டம்","description":"\u003cp\u003eஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத பருவம் குழந்தைப் பருவம். அந்த இனிய நினைவுகளையும், பள்ளி நாட்களின் குறும்புகளையும், முதல் நட்புகளையும், மனதில் பதிந்த மனிதர்களையும் நா. முத்துக்குமார் தனது கவித்துவமான எழுத்து நடையில் உயிரோட்டமாகப் பதிவு செய்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு இது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684735238380,"sku":null,"price":94.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/3dcaa036f484a8f5dc7a8891bfd3211d.jpg?v=1780027877"},{"product_id":"என்னை-சந்திக்க-கனவில்-வராதே","title":"என்னை சந்திக்க கனவில் வராதே","description":"\u003cp\u003eகாதல் எல்லைகளைக் கடந்து மனித மனங்களை இணைக்கும் ஒரு பொதுமொழி என்பதை உணர்த்தும் அழகிய ஜப்பானிய காதல் கவிதைகளின் தமிழாக்கத் தொகுப்பு இது. ஆங்கிலத்தின் வழியாக ஜப்பானியக் கவிதைகளை நா. முத்துக்குமார் தமிழில் எளிமையாகவும், உணர்வின் ஆழம் குறையாமலும் மொழிபெயர்த்துள்ளார். ஜப்பானியக் காதல் கவிதைகளுக்கும் சங்ககாலத் தமிழ்க் காதல் இலக்கியத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை இந்த நூல் வாசகர்கள் உணரச் செய்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684742217964,"sku":null,"price":65.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/687bcba5a65635cceff532b8e2297b75.jpg?v=1780028126"},{"product_id":"நியூட்டனின்-மூன்றாம்-விதி","title":"நியூட்டனின் மூன்றாம் விதி","description":"\u003cp\u003e\"நியூட்டனின் மூன்றாம் விதி\" என்ற தலைப்பைப் போலவே, மனித உறவுகளில் ஒவ்வொரு செயலும் உணர்வும் எதிரொலியை உருவாக்குகிறது என்ற வாழ்க்கை உண்மையை கவிதைகளின் வழியாக உணர்த்தும் இந்த நூல், கவிதை நேசிகள் தவறாமல் வாசிக்க வேண்டிய அழகிய படைப்பாகும்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684748181740,"sku":null,"price":84.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2a0b1efb5caf1e45a68cf3575d49e207.jpg?v=1780028329"},{"product_id":"குழந்தைகள்-நிறைந்த-வீடு","title":"குழந்தைகள் நிறைந்த வீடு","description":"\u003cp\u003eமழலை மனதின் தூய்மையையும், இயற்கையின் அழகையும், அன்றாட வாழ்க்கையின் சிறு சிறு தருணங்களையும் ஹைக்கூ கவிதைகளின் வழியாக மனதைத் தொடும் வகையில் பதிவு செய்திருக்கும் அழகிய கவிதைத் தொகுப்பு இது. எளிய சொற்களில் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நா. முத்துக்குமாரின் தனித்துவமான கவிதை நடையை இந்நூல் முழுவதும் ரசிக்கலாம்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684758241516,"sku":null,"price":103.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/db2cf3a4e7c3fbb15fa378a1a33be321.jpg?v=1780028603"},{"product_id":"மெல்ல-அசையும்-கோவில்-யானை","title":"மெல்ல அசையும் கோவில் யானை","description":"\u003cp\u003e\u003cspan\u003eகவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி 2024 இல் பரிசுபெற்ற 50 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. உணர்வுகளின் உன்னத வெளிப்பாடே கவிதைகள். அப்படிப்பட்ட கவிதைகளின் ஆகச் சிறந்த அழகியல் வடிவம்தான் இந்த ஹைக்கூக்கள். வார்த்தைகளை மிச்சம்பிடித்து அர்த்தங்களை இயற்கை அழகுடன் வரையும் கலை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684776657132,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/4442f0c5e4e40b55c9ffd46a5c9b873e.jpg?v=1780028864"},{"product_id":"கதைகளில்-ஒளிரும்-வாழ்க்கை","title":"கதைகளில் ஒளிரும் வாழ்க்கை","description":"\u003cp\u003eசுகுமாரன் தனக்குத்தானே ஒரு விதியை வகுத்துக்கொண்டு இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தன் ரசனையின் அடிப்படையில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற இருபது படைப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றில் வெளிப்படும் வாழ்க்கையின் தரிசனங்களைத் தொகுத்துள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eமு.வரதராசன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன்\u003c\/strong\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eபோன்ற மூத்த தலைமுறையினரிடமிருந்து தொடங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், தேவிபாரதி போன்ற இப்போதைய தலைமுறையினர் வரை இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். தமிழ்ப்படைப்புகளின் வலிமையை உணர்ந்து, படைப்புகளைத் தேடியெடுத்து ஊன்றிப் படிக்கும் ஆர்வத்தை பொது வாசகர்களிடையில் இத்தொகுதி உருவாக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபல ஆண்டுகால தொடர்ச்சியான தன் வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் படைப்புகளில் பிரதிபலிக்கும் வாழ்க்கை அம்சங்களைத் தொட்டுக்காட்டி, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்கும் இடையில் நிலவும் உறவை உணர்த்தும் வகையில் கட்டுரைகளை அமைத்திருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவாசகர்களுக்கு இதுபோன்ற குறிப்புகள் மிக முக்கியம். ஒரு வழிகாட்டியாக இவை அமைந்து வாசிப்பை மேம்படுத்திக்கொள்ள உதவும். நேரடி வாசிப்பில் தென்படாத அம்சங்களை, கண்டுணர முடியாத மானுட நெருக்கடிகளை அறிவதற்கும் உணர்வதற்கும் இந்த வாசிப்பு உதவியாக இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e- பாவண்ணன்\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684785537260,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/9848b9aae4dac8fcfe0246296adccab3.png?v=1780029144"},{"product_id":"கிராமம்-நகரம்-மாநகரம்","title":"கிராமம் நகரம் மாநகரம்","description":"\u003cp\u003e\u003cstrong data-start=\"223\" data-end=\"248\"\u003eகிராமம் நகரம் மாநகரம்\u003c\/strong\u003e என்பது கவிஞர் \u003cstrong data-start=\"263\" data-end=\"285\"\u003eநா. முத்துக்குமார்\u003c\/strong\u003e அவர்களின் நினைவுகள், அனுபவங்கள் மற்றும் வாழ்க்கைப் பார்வைகளை அழகிய மொழிநடையில் பதிவு செய்துள்ள கட்டுரைத் தொகுப்பாகும். கிராமத்தின் இயல்பான வாழ்க்கை, நகரத்தின் வேகம், மாநகரத்தின் பரபரப்பு ஆகிய மூன்று உலகங்களிலும் மனிதர்கள், உறவுகள், நினைவுகள் மற்றும் கால மாற்றங்கள் எவ்வாறு மனித வாழ்வை வடிவமைக்கின்றன என்பதை நெகிழ்ச்சியுடன் எடுத்துரைக்கும் நூலாக இது திகழ்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684809720044,"sku":null,"price":131.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/ec572678264695bed913c7f11cf66483.jpg?v=1780029376"},{"product_id":"மகாநதி","title":"மகாநதி","description":"\u003cp\u003eவாழ்க்கையை ஓர் ஆழமான, இடையறாது ஓடும் மகாநதியாக விவரிக்கிறது இந்நாவல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஓடும் நதி ஞானம் உபதேசித்ததுண்டா? உண்டு. அந்தச் சித்தியைப் பெற்றவர் இருவர். ஒருவன் சித்தார்த்தன். அடுத்தவன் நான்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eவாழ்க்கை. ஒரு மோகினிபோல என்னுடன் கூடிப் புணர்ந்த காலம் ஒன்று இருந்தது. பொற்காலம் யாருக்குத்தான் இல்லை? மோகினி, இரவும் பகலும் சேர்ந்து உடைக்கும் முட்டையில் தோன்றுபவள். அவள் வருகையை யானைக்கு மணி போல், மல்லிகை மணம் கட்டியம் கூறும். புலன்கள், ராட்சஸ நகங்களாய்க் கூர்மை அடைந்து பிரகாசிக்கும். பொன்னைக் கரைத்து வானத்தில் தெளித்தாற்போல மஞ்சள் களிகொள்ளும் பூமி. அவள் பவானி. இரண்டு கண்களால் பார்ப்பவர்க்குக் காளி. மூன்றாம் கண்ணுடையோர்க்கு அவள் சௌந்தர்ய லஹரி, தசைக் கிளர்ச்சி இராது. யோகம் பூர்ணம் அடையும் விசித்திரச் சம்யோகம் அவளுடையது. அது ஒரு வெறி; வெறியின் தழல். தழலிற நுனிச் சாட்டை பிரக்ஞை மொட்டவிழும் போதே, மொட்டு கனியாகும் அனுபவம் இது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமுன்னுரையில் பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684817682668,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/069b3faba5f5fef7be62cad931e204cf.jpg?v=1780029635"},{"product_id":"அரியநாச்சி","title":"அரியநாச்சி","description":"\u003cp\u003eஆப்பநாட்டின் மண்ணையும், அதன் மக்களின் வீரத்தையும், உறவுகளையும், மரபுகளையும் உயிர்ப்புடன் சித்தரிக்கும் வலிமையான நாவல் இது. ஒரு பெண்ணின் வாழ்க்கை, குடும்பத்தின் கௌரவம், பழிவாங்கும் உணர்வு, காதல், தியாகம் மற்றும் இரத்தமும் மண்ணும் கலந்த வாழ்வியலை வேல ராமமூர்த்தி தனது தனித்துவமான எழுத்து நடையில் ஆழமாகப் பதிவு செய்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684832755948,"sku":null,"price":159.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/a5ddc1e85eec71287f46aaefe43add07.jpg?v=1780029867"},{"product_id":"நேர்மை-படும்-பாடு","title":"நேர்மை படும் பாடு","description":"\u003cp\u003eநேர்மையாக வாழ்வது எளிதல்ல; ஆனால் அதுவே மனிதனின் மிகப் பெரிய பலம் என்பதை உணர்த்தும் சிந்தனைமிக்க நூல் இது. மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய ஆசிரியரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, நேர்மை, மனிதாபிமானம், கடமை உணர்வு மற்றும் நிர்வாகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை உண்மை சம்பவங்களின் வழியாகப் பதிவு செய்கிறது.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684837605612,"sku":null,"price":225.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/23bf2994a5c2e6c09965b1860ae3e037.png?v=1780030398"},{"product_id":"ஆகோள்","title":"ஆகோள்","description":"\u003cp\u003e\u003cspan\u003e‘ஒருபெருங்கதை என்பது பல கிளைக் கதைகளையும், துணைக் கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். ’ஆகோள்’ என்ற இந்த நாவலின்எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனைக் கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாகஇணைவதுதான் இந்த நாவலின் தன்மை. குற்ற இனச் சட்டம் குறித்தநவீன அணுகுமுறையை முன்வைக்கிறது ஆகோள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684839866604,"sku":null,"price":216.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/26e25d44652155241ee21075a504f4c5.jpg?v=1780030950"},{"product_id":"நா-முத்துகுமார்-கட்டுரைகள்","title":"நா.முத்துகுமார் கட்டுரைகள்","description":"\u003cp\u003eஅய்ந்து வயதிலேயே தாயை இழந்தவன் நான். இருபது வயதுவரை கிராமத்தில் என்னை வயர்த்தவர் அப்பாவை பற்ற எனது பாட்டி கிருஷணவேணி அம்மாள். இருபது வயதுக்குப் பிறகு மாநகரத்தில் என்னை வளர்த்துக்காண்டிருப்பவர் அம்மாவைப்பற்ற பாட்டி கிருஷ்ணவேணி அம்மாள். இருவர் பயரும் கிருஷ்ண வேணி என்பது இயற்கையின் இனிய ஒற்றுமை, இவர்கள் இன்றி என் முகவரி சிதறிப் போயிருக்கும். நன்றி என்ற வார்த்தைக்குள் எப்படி இவர்களை அடைப்பது?  \u003c\/p\u003e\n\u003cp\u003eசிறு வயதில் விளையாட்டில்  ஏற்படும் காயங்களில் எல்லாச் சிறுவர்களும் அம்மா என்று குரலடுத்து அழுவார்கள். அப்போதுக்கூட நான்  ‘அப்பா’ என்றுதான் அழுதிருக்கிறேன். என் ஆளுமையில் பரும்பங்கு வகிக்கும் தந்தை எ.நாகராசனுக்கும் என் அமபு.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகாட்டுப் பிரியத்துடன்\u003c\/p\u003e\n\u003cp\u003eநா.முத்துக்குமார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684840816876,"sku":null,"price":517.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/jpg_4a9e8037-4333-4922-8f0a-97c9c2594849.jpg?v=1780031167"},{"product_id":"உலகக்-காதல்-கதைகள்","title":"உலகக் காதல் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதொகுப்புரை: யாயும் ஞாயும் யாராகி யரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே! - குறுந்தொகை: 40, காதல் விநோதமானது; கவர்ச்சியானது: மாயமான மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம். முறையில் மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம், விழைவு, தவிப்பு, காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம், மயக்கம் எனப் பல்வேறு உணர்வு நிலைகளில் காதல் ஏற்படுத்தும் அனுபவங்கள் அளவற்றவை. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே காதல் எனும் மர்ம ஆறு சுழித்தோடிக் கொண்டிருக்கிறது. காதல் என்ற சொல்லுக்குள் புதைந்திருக்கும் பிரமாண்டமான ஆற்றல். சமூகத்தைக் காலந்தோறும் உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறது. புராதன மனிதனின் மூளையை இயக்கிய காதல், ஒருவகையில் சித்தப்பிரமைதான். அது, இன்றளவும் தொடர்கிறது. கடந்த காலத்தில் சமூக வரலாற்றைப் புரட்டிப் போடவும், வன்முறையாளரை அமைதிப்படுத்தவும். எளிய மனங்களை மனப்பிறழ்விற்குள்ளாக்கவும், பேரரசுகளை வீழ்த்திடவும், மென்மையானவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கவும் ஆற்றல்மிக்க காதல், வற்றாத ஆறுபோல எல்லா தேசங்களிலும் பொங்கியோடிக் கொண்டிருக்கிறது. மனித மனத்திற்கு மிகவும் நெருக்கமான காதல், படைப்பாளர்களின் மனதில் காலந்தோறும் சலனங்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. 'மலரினும் மெல்லிது காமம்' என்கிறார் திருவள்ளுவர். காதல் என்றாலே கிளுகிளுப்பு, மகிழ்ச்சி என்று சராசரி இளைஞனும் இளைஞியும் நினைக்கும்வேளையில் நவீனக் காதல் கதைகள் வேறுபட்டனவாக உள்ளன. அவை, மாறிவரும் பெண் ஆண் உறவின் புதிய போக்குகளையும், காதலின் பன்முகத்தன்மைகளையும் மனத் தடைகளற்று விளக்குகிறது இக்கதைகள்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684869980396,"sku":null,"price":376.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/8a92a7cf3e45f587d820d5d323c25b96.jpg?v=1780031459"},{"product_id":"பெண்","title":"பெண்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெண் விடுதலை குறித்து, நான் என் கவலைப்படுகிறேன். என் விடுதலை பற்றி கவலைப்படுவதால், பெண் விடுதலை பற்றியும் கவலைப் படுகிறேன். பெண் விடுதலை இன்றி, ஆண் விடுதலை இல்லை. இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்பட்டிருக்கிறான். சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம் என்பவைகளே அவைகள். இங்கு பெண் ஒவ்வொருத்தியும் சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம் கூடுதலாக ஆண் அடிமைத்தனம் என்கிற மூன்று அடிமைச் சக்திகளுக்கு அடிமைப்பட்டுள்ளாள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684934140140,"sku":null,"price":206.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/2ce14db48fc32a4376dba5970797a972.jpg?v=1780031882"},{"product_id":"தாழப்பறக்காத-பரத்தையர்-கொடி","title":"தாழப்பறக்காத பரத்தையர் கொடி","description":"\u003cp\u003eநாம் சமூகம், மனிதர்கள் சுயமரியாதையோடும், மனிதத் தனத்தோடும் வாழத் தக்கதாக இருக்கிறதா என்றால் இல்லை. சகமனிதன் பற்றிய புரிதல், பரிவு, அன்பு அனைத்தும் குறைந்து வருவதுகூட இல்லை. முரண்பட்டு வருவதுகூட இல்லை. பகைக்கும்-நிலைக்கும் செலுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகவும் கவலை தருகிறது.சமூகம் என்கிற திரள் உணர்வு குறைந்து விட்டது. அந்தந்த காலத்தில் என்னைப் பெரிதும் பாதித்த விஷயங்களின் எதிர்வினையே இக்கட்டுரைகள். இப்போது திரும்பிப் படிக்கையில் எனக்கு மிகவும் திருப்தியாகவே இருக்கிறது. எழுத்துக்களில் மட்டுமல்ல. எல்லாத் தொழிலுக்கும் அடிப்படைப் பண்பாக இருப்பது ‘அறம்’. என் அளவில் இக் கட்டுரைகள் என் அறம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பிரபஞ்சன்\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684939743468,"sku":null,"price":169.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/5fe76353319f287360812064a5eb2d56.png?v=1780034631"},{"product_id":"கலை-எழுத்து","title":"கலை எழுத்து","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒரு சிந்தனை எளிதில் புரியும் படி, என்னமா எழுதி இருக்கிறாருப்பா என்ற உணர்வு வந்தபோதெல்லாம் அந்த பாடல் வரிகள் நா முத்துக்குமார் பெயரையே உச்சரித்தன. நான் முதன்முதலாய்,முழுவதுமாய் படித்த புத்தகம் அவருடையது தான். காரணம் அவர் மீது கொண்ட ஈர்ப்பு தான். தொடர்ந்து இன்னும் பல கவிஞர்களுடைய கவிதைத் தொகுப்புகளைப் படிக்கப் படிக்க நான் காணும் அனைத்தையும் தொடர்ச்சியாய் வரிகளாய் எழுத ஆரம்பித்தேன். சமூக வலைத்தளங்களிலும் கண்டதை எழுதும் பாலாஜி என்னும் பெயரில் பதிவிட ஆரம்பித்தேன். இதுவே, என் எழுத்து பயணத்தின் தொடக்கம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684940726508,"sku":null,"price":141.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/0a8072a35fe554e840156be00f594768.jpg?v=1780035001"},{"product_id":"வேல-ராமமூர்த்தி-கதைகள்","title":"வேல ராமமூர்த்தி கதைகள்","description":"\u003cp\u003eமண்ணின் மணம், கிராமிய வாழ்க்கையின் உண்மை, மனித உறவுகளின் ஆழம் ஆகியவற்றை உயிரோட்டமாகச் சொல்லும் சிறுகதைத் தொகுப்பு இது. தென் தமிழகத்தின் மண், மக்கள், மரபு, காதல், பகை, வீர உணர்வு, சாதி அமைப்பு மற்றும் எளிய மக்களின் வாழ்வியல் போராட்டங்களை வேல ராமமூர்த்தி தனது தனித்துவமான எழுத்து நடையில் பதிவு செய்கிறார்.\u003c\/p\u003e","brand":"centaram","offers":[{"title":"Default Title","offer_id":47684945805548,"sku":null,"price":300.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0823\/2694\/6028\/files\/05808fec8df2031315360f52a4b7d2d9.jpg?v=1780035259"}],"url":"https:\/\/centaram.com\/collections\/discovery-book-palace.oembed","provider":"Centaram Shopping","version":"1.0","type":"link"}